education

img

அரசுப் பள்ளியில் படித்து சாதித்த மாணவி

புதுச்சேரி:
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை அமைச்சர் கமலக்கண்ணன் பாராட்டினார்.

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது. 829 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவடைந்த நிலையில் நேர்காணல் நடைபெற்று தேர்வு முடிவுகள்  வெளியாகின.இதில், அகில இந்திய அளவில் 36வது இடத்தையும் புதுச்சேரி மாநிலத்தில் முதலிடத்தையும் காரைக்காலைச் சேர்ந்த சரண்யா என்ற மாணவி பிடித்துள்ளார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா ஆகியோர் சரண்யாவை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.36 வது இடத்தை பிடித்த சரண்யா தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாவது இடத்தை பிடித்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து சரண்யா கூறுகையில், “அரசு பள்ளியில் படித்து இந்த இடத்தை பிடித்துள்ள தாகவும், தான் தமிழகத்தில்தான் பணியாற்ற வேண்டும் என விரும்புவதாகவும்” தெரிவித்தார்.

;